பயிற்சி மருத்துவர்களுக்கு 3 மாதம் ஊக்கத்தொகை இழுத்தடிப்பு : கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை : 3 மாத காலமாக ஊக்கத்தொகை வழங்காததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


கோவை : 3 மாத காலமாக ஊக்கத்தொகை வழங்காததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 2,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்படி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க குறைந்த அளவிலேயே மருத்துவர்கள் உள்ள நிலையில், சி.ஆர்.ஆர்.ஐ. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலைப் படிக்கும் மருத்துவர்களை வைத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதனிடையே, இந்த பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை கடந்த 3 மாதமாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.



இந்த நிலையில், இன்று காலை பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கான ஊக்க தொகையை உடனடியாக வழங்கக் கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வரும் 280 பயிற்சி மருத்துவர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனையில் நடைபெறும் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...