அருவங்காடு வெடிமருந்து தொழற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு : இன்று முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று முதல் ஒரு மாதம் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.



குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட 41 தளவாடப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னூரில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று குடும்பத்துடன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.



அதன்படி, இன்று காலை சி.எப்.எல்.யு., டி.எப்.எல்.யு., என்.இ.யு. மற்றும் சி.டி.ஆர்.ஏ., தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தொழிற்சாலை வளாகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், சி.எப்.எல்.யு., தொழிற்சங்க தலைவர் அசோகன், என்.இ.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலீப்குமார், டி.எப்.எல்.யு., தொழிற்சங்க இணை செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். அப்போது, இன்று முதல் ஒரு மாதம் காலம் பணி புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...