கோவையில் ஒரே நாளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

கோவை : கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் இரு வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் இரு வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னிமடை அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எம். கணேசன் (29). ஓட்டுநரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பணியை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே புதரில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேறாத காட்டு யானை, நேற்று இரவு தொப்பம்பட்டி கிராமத்தில் உலா வந்து கொண்டிருந்தது. அப்போது, கணபதி கார்டன் பகுதியில் பிரேம் கார்த்தி தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த யானை இருவரையும் தாக்கியது. இதில், பிரேம் கார்த்தி பலத்த காயமடைந்தார். விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.



இதைத் தொடர்ந்து, பிரேம் கார்த்தி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பன்னிமடையைச் சேர்ந்த கணேசனின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 நிவாரணமாக வனத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்டது.

கோவையில் ஒரே நாளில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

மேலும், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல் குறித்து 180042545456 என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...