கோவை : கோவையில் அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் பள்ளி தாளாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை : கோவையில் அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் பள்ளி தாளாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சக்தி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் வளர்மதி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார் அதில், அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பள்ளி தாளாளர் வளர்மதி கூறியதாவது :- பள்ளி இயங்கி வந்த இடத்தின் மொத்த பரப்பளவு 2.16 ஏக்கராகும். அதில், 1.68 ஏக்கர் நிலத்தில் பள்ளி இயங்கி வந்தது. எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 70 பேர் பயின்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதுடன், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கட்டிடத்தை இடித்தவர்கள் மூலம் கொலை மிரட்டல்கள் வருவதால், எனக்கும், எனது உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.
இது தங்களது குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சொத்து. சகோதரர் சக்திவேல் பெயரில் உள்ள இந்த சொத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் பள்ளி இயங்கி வந்தது. தனது சகோதரரின் மனைவி வேறு சிலருடன் இணைந்து எனது பள்ளி கட்டிடத்தை இடித்துள்ளார், எனக் கூறினார்.

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சக்தி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் வளர்மதி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார் அதில், அத்துமீறி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பள்ளி தாளாளர் வளர்மதி கூறியதாவது :- பள்ளி இயங்கி வந்த இடத்தின் மொத்த பரப்பளவு 2.16 ஏக்கராகும். அதில், 1.68 ஏக்கர் நிலத்தில் பள்ளி இயங்கி வந்தது. எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 70 பேர் பயின்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதுடன், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கட்டிடத்தை இடித்தவர்கள் மூலம் கொலை மிரட்டல்கள் வருவதால், எனக்கும், எனது உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.
இது தங்களது குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சொத்து. சகோதரர் சக்திவேல் பெயரில் உள்ள இந்த சொத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் பள்ளி இயங்கி வந்தது. தனது சகோதரரின் மனைவி வேறு சிலருடன் இணைந்து எனது பள்ளி கட்டிடத்தை இடித்துள்ளார், எனக் கூறினார்.