கிருஷ்ணர் சிலை வைக்க பணம் கேட்டு தாக்குதல் : விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு கடை வியாபாரியை தாக்கியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் கேட்டு கடை வியாபாரியை தாக்கியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிலை வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 23-ம் தேதி கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலையை வைப்பதற்கு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அப்பகுதியில் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள சிவா என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடையில் வசூல் செய்துள்ளனர். அப்போது, கடையின் உரிமையாளர் சிவா ரூ. 300 தந்துள்ளார். ஆனால், எங்களுக்கு ரூ. 1,000 வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர்.



இருப்பினும், அவர் தர மறுத்ததால் விஸ்வ ஹிந்து பரிசத்தைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உட்பட அவரது நண்பர்கள் 5 பேரும் பணம் தர மறுத்த சிவாவை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைக் கொண்டு, சிவா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, காவல்துறையினர் விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...