கோவை : ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
கோவை : ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜெய்ப்பூரில் மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் முன்னதாக செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த எம்.பி. மதன்லால் சைனி, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி வரை இருக்கிறது. எனவே, மன்மோகன் சிங் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருக்கலாம்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜெய்ப்பூரில் மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் முன்னதாக செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த எம்.பி. மதன்லால் சைனி, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி வரை இருக்கிறது. எனவே, மன்மோகன் சிங் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருக்கலாம்.