பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

கோவை : துடியலூர் அருகே நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : துடியலூர் அருகே நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பன்னிமடை அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எம். கணேசன் (29). ஓட்டுநரான இவர் நேற்று நள்ளிரவு பணியை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே புதரில் மறைந்திருந்த காட்டு யானை கணேசனை கடுமையாக தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த கணேசனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல் குறித்து 180042545456 என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...