திருப்பூர் : பள்ளிக்கு அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் : பள்ளிக்கு அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தணம்பாளையம் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள விஜயாபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர். பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இந்த பள்ளி மாணவர்கள் தினமும் 8 கி.மீ நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். மேலும், நடந்து செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால், நடந்து போகும் போது அதிக தொந்தரவுகள் வருவதாகவும் புகார் கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுக்க இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர்கள் சென்றனர். அங்கு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
பின்னர், சில மாணவர்கள் மட்டும் சென்று பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தணம்பாளையம் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள விஜயாபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர். பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இந்த பள்ளி மாணவர்கள் தினமும் 8 கி.மீ நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். மேலும், நடந்து செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால், நடந்து போகும் போது அதிக தொந்தரவுகள் வருவதாகவும் புகார் கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுக்க இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர்கள் சென்றனர். அங்கு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
பின்னர், சில மாணவர்கள் மட்டும் சென்று பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.