கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் : கோபத்தில் மருமகனைக் கொன்ற மாமனார்

கோவை : கோவையில் மாமியாரின் கன்னத்தில் அறைந்த மருமகனை கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை : கோவையில் மாமியாரின் கன்னத்தில் அறைந்த மருமகனை கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள சோப்பு கம்பெனி பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாலினி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகிறது. இந்த நிலையில், ராஜேந்திரன் தான் செய்து வரும் பெயிண்டிங் வேலைக்கு சரியாக செல்வதில்லை எனக் கூறி மனைவிக்கும், அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்தது. இப்படி இருக்க நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கவுண்டம்பாளையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார்.



இதையடுத்து, ராஜேந்திரன் ஷாலினியின் சகோதரி வீட்டுக்கு சென்று தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதில், ஷாலினியின் தாயார் மீனா, ராஜேந்திரனை சரியாக வேலைக்கு செல்வதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மாமியாரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து, மாமியார் மீனா தனது கணவர் தங்கமணியிடம் விவரங்களை அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த தங்கமணி மருமகனுடன் நேரில் வந்து பேசும்போது வாக்குவாதம் மூண்டு கைகலப்பாக மாறியது. பின்னர், தங்கமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகன் ராஜேந்திரனின் முதுகில் குத்தினார். இதைத்தொடர்ந்து, தப்பி ஓட முயற்சி செய்த மருமகனை மீண்டும் சரமாரியாக குத்தினார். இதனால், ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை அருகே உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

ஆனால், ராஜேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருமகனை கத்தியால் குத்தி தலைமறைவாக இருக்கும் மாமனாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...