நீர்நிலைகள் மாசில்லாத விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மாவட்ட நிர்வாகம் அறிவுரை

கோவை : வரும் விநாயகர் சதுர்த்தியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை கடைபிடித்து நீர்நிலைகள் மாசில்லாமல் கொண்டாட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை : வரும் விநாயகர் சதுர்த்தியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை கடைபிடித்து நீர்நிலைகள் மாசில்லாமல் கொண்டாட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விநாயகர்‌ சிலைகளை நீர்‌ நிலைகளில்‌ கரைப்பதற்கான வழிமுறைகள்‌ தமிழக முதலமைச்சரின்‌ சீரிய நல்லாட்சியில்‌ சுற்றுச்‌சூழலை பாதுகாப்பதில்‌ தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம்‌ விளங்கி வருகிறது. சுற்றுச்‌ சூழல்‌ பாதுகாப்பில்‌ மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்‌ நிலைகள்‌ (கடல்‌, ஆறு மற்றும்‌ குளம்‌) நமக்கு குடிநீர்‌ ஆதாரத்தை தருகிறது. நீர்‌ நிலைகளை பாதுகாக்கும்‌ வகையில்‌ வருகிற விநாயகர்‌ சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர்‌ சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால்‌ குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில்‌ மட்டும்‌ கரைத்து சுற்றுச்‌ சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌கொள்கிறேன்‌.

எனவே, பொது மக்களுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள்‌ விடப்படுகிறது.

1. களிமண்ணால்‌ செய்யப்பட்டதும்‌/சுடப்படாததும்‌ மற்றும்‌ எவ்வித இரசாயனக்‌ கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும்‌ மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும்‌ ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள்‌ போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால்‌ மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர்‌ சிலைகளை நீர்நிலைகளில்‌ பாதுகாப்பான முறையில்‌ கரைக்க அனுமதிக்கப்படும்‌.

2. நீரில்‌ கரையும்‌ தன்மையுடைய மற்றும்‌ தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர்‌ சிலைகளை உபயோகிக்க வேண்டும்‌. இரசாயன வாணம்‌ பூசப்பட்ட விநாயகர்‌ சிலைகளை நீர்நிலைகளில்‌ கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

3. விநாயகர்‌ சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால்‌ குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில்‌ மட்டும்‌ தமிழ்‌நாடு மாசுக்‌ கட்டுப்பாடு வாரியத்தின்‌ விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்‌. விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப்‌ பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மாவட்ட ஆட்சியர்‌, காவல்‌துறை கண்காணிப்பாளர்‌ மற்றும்‌ மாவட்ட சுற்றுச்சூழல்‌ பொறியாளர்‌ ஆகியோரை மேலும்‌ விபரங்களுக்கு அணுகலாம்‌, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...