திருப்பூர் : திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அரிசி கடையில் மேற்கூரையை உடைத்து நூதன முறையில் பெண் வேடமிட்டு ரூ. 27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பென் டிரைவ்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருப்பூர் : திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள அரிசி கடையில் மேற்கூரையை உடைத்து நூதன முறையில் பெண் வேடமிட்டு ரூ. 27 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பென் டிரைவ்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
எம்.எஸ். நகர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் 10.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் கடையை திறந்த போது, மேற்கூரை உடைக்கப்பட்டதை கண்டு அதிச்சி அடைந்தார். பின்பு கடைக்குள் சென்று பார்த்தபோது, ரூ. 27 ஆயிரமும், 4 பென் டிரைவ்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதே போல், கடந்த 3 மாதத்திற்கு முன்பும் 2018-லும் இரண்டு முறை திருட்டு போனதாக கூறினார். மேலும், இந்த நூதன முறையில் திருடன் பெண் வேடமிட்டு இதுவரை திருட்டில் ஈடுபட்டது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் தொடர் திருட்டு செய்து வரும் திருடனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனர். வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எஸ். நகர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் 10.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் கடையை திறந்த போது, மேற்கூரை உடைக்கப்பட்டதை கண்டு அதிச்சி அடைந்தார். பின்பு கடைக்குள் சென்று பார்த்தபோது, ரூ. 27 ஆயிரமும், 4 பென் டிரைவ்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதே போல், கடந்த 3 மாதத்திற்கு முன்பும் 2018-லும் இரண்டு முறை திருட்டு போனதாக கூறினார். மேலும், இந்த நூதன முறையில் திருடன் பெண் வேடமிட்டு இதுவரை திருட்டில் ஈடுபட்டது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் தொடர் திருட்டு செய்து வரும் திருடனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனர். வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.