நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் மீண்டும் விவசாயத்தை துவங்க உரம் மற்றும் விதைளை அரசு வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் மீண்டும் விவசாயத்தை துவங்க உரம் மற்றும் விதைளை அரசு வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உதகை, கோடப்பமந்து, காந்தல், எமரால்டு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததது. இதன் காரணமாக, அங்கு பயிரிடப்பட்டிருந்த முள்ளங்கி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், கிழங்கு உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகள் நீரில் மூழ்கின. இதன் காரணமாக, சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் நாசமாகின.

இதனை தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தண்ணீர் வடிய தொடங்கிவிட்ட நிலையில், மீண்டும் விவசாயம் துவங்க இப்பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இருப்பினும், விதைகளும், உரங்ளையும் இந்த ஒரு போகத்திற்கு அரசு வழங்கினால், மீண்டும் தங்களால் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உதகை, கோடப்பமந்து, காந்தல், எமரால்டு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததது. இதன் காரணமாக, அங்கு பயிரிடப்பட்டிருந்த முள்ளங்கி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், கிழங்கு உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகள் நீரில் மூழ்கின. இதன் காரணமாக, சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் நாசமாகின.

இதனை தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தண்ணீர் வடிய தொடங்கிவிட்ட நிலையில், மீண்டும் விவசாயம் துவங்க இப்பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இருப்பினும், விதைகளும், உரங்ளையும் இந்த ஒரு போகத்திற்கு அரசு வழங்கினால், மீண்டும் தங்களால் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.