திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக திருப்பூரில் பாரம்பரியமிக்க நடுநிலைப்பள்ளியை இடிக்கக் கூடாது எனக் கூறி மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக திருப்பூரில் பாரம்பரியமிக்க நடுநிலைப்பள்ளியை இடிக்கக் கூடாது எனக் கூறி மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் புதியதாகவும், விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையமாகவும் கட்டப்பட உள்ளது. அதன் அருகிலேயே கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட உள்ளதால், தற்போது செயல்பட்டு வரும் முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க உள்ளது. இதற்கு அப்பள்ளியில் பயின்று வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் சார்பில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், வேறு பள்ளிகளில் தங்கள் மாணவ, மாணவிகளை சேர்க்கும்போது அவர்களின் போக்குவரத்து நேரமும் அதிகமாவதோடு, பாதுகாப்பு வசதியின்மை ஏற்படுவதால், பள்ளியை இப்பகுதியிலேயே செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வந்த மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நிறைவடையும் முன்பாகவே மாநகராட்சி ஆணையர் சிவகுமார் கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே முடிவடைந்தது.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் புதியதாகவும், விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையமாகவும் கட்டப்பட உள்ளது. அதன் அருகிலேயே கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட உள்ளதால், தற்போது செயல்பட்டு வரும் முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க உள்ளது. இதற்கு அப்பள்ளியில் பயின்று வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் சார்பில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், வேறு பள்ளிகளில் தங்கள் மாணவ, மாணவிகளை சேர்க்கும்போது அவர்களின் போக்குவரத்து நேரமும் அதிகமாவதோடு, பாதுகாப்பு வசதியின்மை ஏற்படுவதால், பள்ளியை இப்பகுதியிலேயே செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வந்த மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நிறைவடையும் முன்பாகவே மாநகராட்சி ஆணையர் சிவகுமார் கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே முடிவடைந்தது.