கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் : ரூ. 8 கோடி வருவாய் பாதிப்பு

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 8 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 8 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி டாஸ்மாக் கடை எண் 2962 கடையில் ஊழியராக பணியாற்றும் ராஜா (45) என்பவர் சமூக விரோதிகளால் கடந்த 14ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும், பாதுகாப்பு அம்சங்களை உடனே ஏற்படுத்தி தர வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. கோவையில் நாளொன்றுக்கு 8 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கொடுக்கும் கடைகள் திறக்கப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த டாஸ்மாக் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, படுகொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர். மேலும், டாஸ்மாக் கடைகளின் வேலைநேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனவும், ஊரகப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...