நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது : உதகையில் சீமான் பேட்டி

நீலகிரி : நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. என நீலகிரி மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. என நீலகிரி மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டம் உதகை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குருத்துக்குளி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் சீமான் நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறுவதை விட்டுவிட்டு, மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும். நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. மேலும், நீலகிரியில் உள்ள பல விளை நிலங்களில் குத்தகை அடிப்படையில் பலர் விவசாயம் செய்வதால், நன்கு விசாரித்து குத்தகைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமே ஒழிய, நில உரிமையாளர்களுக்கு அந்தத் தொகை சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேரளாவில் ராகுல் கூறியது போல், எந்தக்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும், என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...