கோவை : சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற சைக்கிள் பேரணி கோவையில் நடைபெற்றது
கோவை : சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற சைக்கிள் பேரணி கோவையில் நடைபெற்றது

நம் நாட்டின் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி வடகோவையில் இருந்து மேட்டுப்பாளையம், அன்னூர் சின்னியம்பாளையம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது. இப்பேரணியில் இரண்டு பெண்கள், குழந்தைகள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 56 பேர் தேசிய கொடியுடன் சைக்கிள் பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும்போது :- நம் இந்திய திருநாட்டில் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாகவும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த சுதந்திர தினத்தை கடைபிடிக்க வேண்டும். இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். நம் இந்திய திருநாட்டின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக பெருமையில் ஆர்வத்துடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன், என தெரிவித்தனர்.


நம் நாட்டின் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி வடகோவையில் இருந்து மேட்டுப்பாளையம், அன்னூர் சின்னியம்பாளையம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது. இப்பேரணியில் இரண்டு பெண்கள், குழந்தைகள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 56 பேர் தேசிய கொடியுடன் சைக்கிள் பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும்போது :- நம் இந்திய திருநாட்டில் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாகவும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த சுதந்திர தினத்தை கடைபிடிக்க வேண்டும். இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். நம் இந்திய திருநாட்டின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக பெருமையில் ஆர்வத்துடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன், என தெரிவித்தனர்.
