73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தேசிய கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தேசிய கொடியேற்றி வைத்து, ரூ. 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் : 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தேசிய கொடியேற்றி வைத்து, ரூ. 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தியா முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் சார்பில் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். 



பின்னர், சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்தபின் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவித்தனர். மேலும், மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...