கோலகலமாக கொண்டாடப்பட்ட 73வது சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவ, மாணவியர்கள்

கோவை : கோவையில் கொண்டாடப்பட்ட 73-வது சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் காண்போரை கவரும் வண்ணம் அமைந்தது.

கோவை : கோவையில் கொண்டாடப்பட்ட 73-வது சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் காண்போரை கவரும் வண்ணம் அமைந்தது.

73-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதன் பின்னர், நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், விளாங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களின் கோலாட்டம், விளாங்குறிச்சி ஆர்.ஜே. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல், லட்சுஷ்மி நாயக்கன் பாளையம் எஸ்.ஆர்.என்.வி மாணவர்களின் ஒயிலாட்டம், கிணத்துக்கடவு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல் என அசத்தினர்.



மேலும், குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களின் சிலம்பம், துணி வணிகர் சங்க பள்ளி மாணவர்களின் கிராமிய பாடல், வரதராஜபுரம் என்.ஜி.ஆர் பள்ளி மாணவர்களின் பிரமிட், சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஐ லவ் இந்தியா பாடல், தெலுங்குபாளையம் வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், கரகம் என மொத்தம் 1,160 பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களது கலை நிகழ்ச்சியை அங்கிருந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் ரசித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...