கோவை : ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாணவர்களை குறிவைத்து பல கும்பல்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்படியிருக்க கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, அந்தந்த காவல் எல்லையில் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை கண்காணித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சுங்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா மற்றும் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான காவலர்கள் மகேந்திரன், சண்முகம், ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுங்கம் பகுதியில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

சுங்கம் தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த உதய்விக்ரம் (19), மாரிமுத்து (20) ஆகிய இரண்டு இளைஞர்களும், அதேபோல சுங்கம் புறவழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த விஜய்குமார் (23), நவீன்குமார் (23), கௌசிக் (22) ஆகியோரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் 2,250 ரூபாய் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலில் ஒரு பிரிவினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாணவர்களை குறிவைத்து பல கும்பல்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்படியிருக்க கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, அந்தந்த காவல் எல்லையில் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை கண்காணித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சுங்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா மற்றும் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான காவலர்கள் மகேந்திரன், சண்முகம், ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுங்கம் பகுதியில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

சுங்கம் தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த உதய்விக்ரம் (19), மாரிமுத்து (20) ஆகிய இரண்டு இளைஞர்களும், அதேபோல சுங்கம் புறவழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த விஜய்குமார் (23), நவீன்குமார் (23), கௌசிக் (22) ஆகியோரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் 2,250 ரூபாய் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலில் ஒரு பிரிவினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.