நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று பார்வையிட்டார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று பார்வையிட்டார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. மேலும், நகரங்களை இணைக்கும் சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.

இந்த நிலையில், உதகை அருகே உள்ள எமரால்டு, குருத்துக்குளி, அட்டுபாயில், காட்டு குப்பை ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இயற்கைப் பேரிடர்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு தேவைகளை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. தற்போது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளதால், முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கணக்கெடுக்கப்பட்டு செய்து கொடுக்கப்படும், கன மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர் பகுதிகளை நாளை ஆய்வு செய்ய உள்ளேன், என தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. மேலும், நகரங்களை இணைக்கும் சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.

இந்த நிலையில், உதகை அருகே உள்ள எமரால்டு, குருத்துக்குளி, அட்டுபாயில், காட்டு குப்பை ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இயற்கைப் பேரிடர்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு தேவைகளை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. தற்போது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளதால், முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கணக்கெடுக்கப்பட்டு செய்து கொடுக்கப்படும், கன மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர் பகுதிகளை நாளை ஆய்வு செய்ய உள்ளேன், என தெரிவித்தார்.