51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும் : மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார்

கோவை : கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சவாலான ஒன்றாக இருக்கிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை மக்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை நடைபெறுவது போல, மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், குப்பை போடும் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் குப்பை வரி வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும், மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாளைக்குள் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...