கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக ரமேஷ் கிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக ரமேஷ் கிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளராக சௌந்தர ராஜன் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பணியிடம் காலியாக இருந்தது. இப்படி இருக்க சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் கூடுதலாக மாநகர நுண்ணறிவு பிரிவு பணியையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், திருப்பூரில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த ரமேஷ் கிருஷ்ணன் இன்று கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும், இவர் ஏற்கனவே கோவை தெற்கு பகுதியில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இவர் கோவையில் உதவி ஆணையாளராக இருந்த போது அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளராக சௌந்தர ராஜன் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பணியிடம் காலியாக இருந்தது. இப்படி இருக்க சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் கூடுதலாக மாநகர நுண்ணறிவு பிரிவு பணியையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், திருப்பூரில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த ரமேஷ் கிருஷ்ணன் இன்று கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும், இவர் ஏற்கனவே கோவை தெற்கு பகுதியில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இவர் கோவையில் உதவி ஆணையாளராக இருந்த போது அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.