கோவை : சிறுவாணியில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை பல்வேறு அமைப்புகளின் உ.தவியுடன் சிறுவாணி விழுதுகள் அமைப்பினர் மேற்கொண்டனர்.
கோவை : சிறுவாணியில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை பல்வேறு அமைப்புகளின் உ.தவியுடன் சிறுவாணி விழுதுகள் அமைப்பினர் மேற்கொண்டனர்.
கடந்த 8-ம் தேதி சிறுவாணியில் நொய்யலின் கிளை நதிகளில் உள்ள நீரின் நிலவரத்தைப் பார்க்க சென்ற போது, நண்டங்கரை தடுப்பணையில் மதுபோதையில் அணைக்குள் குதித்து நீந்த முடியாமல் நீரில் மூழ்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நபரை சிறுவாணி விழுதுகளின் நண்பர்கள் உடனடியாக செயல்பட்டு அந்நபரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து, 9 மற்றும் 10-ம் தேதிகளில் போரத்தி பதி, கல்கொத்தி பதி, சிறுவாணி, வெள்ளபதி, பொட்ட பதி மற்றும் சாடிவயல் பதி உள்ளிட்ட 6 மலைக்கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தனர்.
இந்த நிவாரணப் பணிகளில் புதியதோர் உலகம் செய்வோம் சமூக சேவை மையம், நல்லறம் அறக்கட்டளை, ஈஷா அறக்கட்டளை மற்றும் சிறுவாணி விழுதுகள் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.
கடந்த 8-ம் தேதி சிறுவாணியில் நொய்யலின் கிளை நதிகளில் உள்ள நீரின் நிலவரத்தைப் பார்க்க சென்ற போது, நண்டங்கரை தடுப்பணையில் மதுபோதையில் அணைக்குள் குதித்து நீந்த முடியாமல் நீரில் மூழ்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நபரை சிறுவாணி விழுதுகளின் நண்பர்கள் உடனடியாக செயல்பட்டு அந்நபரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து, 9 மற்றும் 10-ம் தேதிகளில் போரத்தி பதி, கல்கொத்தி பதி, சிறுவாணி, வெள்ளபதி, பொட்ட பதி மற்றும் சாடிவயல் பதி உள்ளிட்ட 6 மலைக்கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தனர்.
இந்த நிவாரணப் பணிகளில் புதியதோர் உலகம் செய்வோம் சமூக சேவை மையம், நல்லறம் அறக்கட்டளை, ஈஷா அறக்கட்டளை மற்றும் சிறுவாணி விழுதுகள் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.