கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10,000 மரக்கன்றுகளை அனுப்பும் நிகழ்ச்சி பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10,000 மரக்கன்றுகளை அனுப்பும் நிகழ்ச்சி பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை, இயற்கை தன்னார்வ அமைப்பு மற்றும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சர்வஜனா பள்ளி ஆகியவை ஒன்றிணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்ய விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 'ஒரு விதை புரட்சி' என்பதை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வில், ஒரு விதை புரட்சி என்ற எழுத்து வடிவத்தில் மரக்கன்றுகளுடன் சுமார் 4,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று நின்ற காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் மெஹந்தி சர்கஸ் திரைப்படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், மரம் வளர்ப்பு குறித்தும், மரத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, மாணவர்கள் கையில் வைத்திருந்த 4,000 ஆயிரம் மரக்கன்றுகள் உட்பட 10 ஆயிரம் மரக்கன்றுகளை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்பட கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னுடைய பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்கும் நிகழ்வாக இது அமைந்தது. வரும் காலங்களில் தன்னால் ஆன உதவிகளை செய்வேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்," எனக் கூறினார்.

மேலும், மெஹந்தி சர்க்கஸ் படம் வெற்றியை அடுத்து வேறு படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இரண்டாவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். விரைவில் அதற்கான தகவல் வெளியிடப்படும், என்றார்.
தமிழ்நாடு வனத்துறை, இயற்கை தன்னார்வ அமைப்பு மற்றும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சர்வஜனா பள்ளி ஆகியவை ஒன்றிணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்ய விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 'ஒரு விதை புரட்சி' என்பதை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வில், ஒரு விதை புரட்சி என்ற எழுத்து வடிவத்தில் மரக்கன்றுகளுடன் சுமார் 4,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று நின்ற காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் மெஹந்தி சர்கஸ் திரைப்படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், மரம் வளர்ப்பு குறித்தும், மரத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் உரையாடினார். தொடர்ந்து, மாணவர்கள் கையில் வைத்திருந்த 4,000 ஆயிரம் மரக்கன்றுகள் உட்பட 10 ஆயிரம் மரக்கன்றுகளை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்பட கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னுடைய பள்ளி நாட்களை திரும்பிப் பார்க்கும் நிகழ்வாக இது அமைந்தது. வரும் காலங்களில் தன்னால் ஆன உதவிகளை செய்வேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்," எனக் கூறினார்.

மேலும், மெஹந்தி சர்க்கஸ் படம் வெற்றியை அடுத்து வேறு படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இரண்டாவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். விரைவில் அதற்கான தகவல் வெளியிடப்படும், என்றார்.