கோவை : சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இயற்கை பாதுகாப்பு சமுதாயம், உலகளாவிய இயற்கை நிதியம் மற்றும் கோவை வனத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை அரசு கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை கோவை வனவிலங்கு காப்பாளர் சி. பத்ரசாமி, உலகளாவிய இயற்கை நிதியத்தின் தலைவர் என்.ஐ. ஜலாதுதீன் உள்ளிட்டோர் முன்னிலையில் கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், ஆசி யானைகள் பற்றி மாணவர்களிடையே கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் எடுத்துரைத்தார். பாரதி பூங்கா சாலை, ஜி.சி.டி., லாலி ரோடு வழியாக தமிழ்நாடு வன அகாடமியில் முடிவடைந்தது. இந்தப் பேரணியின் போது யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

இயற்கை பாதுகாப்பு சமுதாயம், உலகளாவிய இயற்கை நிதியம் மற்றும் கோவை வனத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை அரசு கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை கோவை வனவிலங்கு காப்பாளர் சி. பத்ரசாமி, உலகளாவிய இயற்கை நிதியத்தின் தலைவர் என்.ஐ. ஜலாதுதீன் உள்ளிட்டோர் முன்னிலையில் கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், ஆசி யானைகள் பற்றி மாணவர்களிடையே கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் எடுத்துரைத்தார். பாரதி பூங்கா சாலை, ஜி.சி.டி., லாலி ரோடு வழியாக தமிழ்நாடு வன அகாடமியில் முடிவடைந்தது. இந்தப் பேரணியின் போது யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.