திருப்பூர் : திருப்பூரில் பல நாட்களாக குப்பைகளை அள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் குப்பைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் பல நாட்களாக குப்பைகளை அள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் குப்பைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு எஸ்.வி. காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் பல நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால், குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதற்கு முன்வராத காரணத்தால், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் குப்பையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை லாரியை அனுப்பி சுத்தம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு எஸ்.வி. காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் பல நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால், குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதற்கு முன்வராத காரணத்தால், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் குப்பையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை லாரியை அனுப்பி சுத்தம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
