சாய்பாபா காலனி பகுதியில் சந்தனமரம் கடத்தப்பட்ட விவகாரம் : இருவர் கைது

கோவை : சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள குடியிருப்பில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கோவை : சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள குடியிருப்பில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி சாய்பாபா காலனி பாரதி பார்க் 2-வது வீதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரது வீட்டில் இருந்த சுமார் 30 அடி உயரமுள்ள சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் பிரேம்குமார் சாய்பாபா காலனி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தொடரும் சந்தனமர கடத்தலை தடுக்கும் வகையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் நேற்று சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த புங்கன் என்ற மகேந்திரன் என்பவரையும் சாய்பாபா காலனி அருகே வைத்து நேற்று கைது செய்தனர். இதையடுத்து, இவர்கள் நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...