கோவை : பீளமேடு அருகே போர் போடும் பணிக்காக சாலையின் ஓரத்தில் இருந்த 6 ஆண்டுகளாகிய மரத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை : பீளமேடு அருகே போர் போடும் பணிக்காக சாலையின் ஓரத்தில் இருந்த 6 ஆண்டுகளாகிய மரத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பீளமேடு அருகே உள்ள கேப் நீம் லேண்ட் என்ற பகுதியில் கோவை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கான போர் போடும் பணி நடைபெற்றது. அப்போது, கோவையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான டாக்டர் ஆர். டோல்ஸ்டோய் என்பவர் சாலையின் ஓரத்தில் 6 ஆண்டுகளாகிய புன்னை மரத்தை நடவு செய்து பராமரித்து வந்தார். இந்த போர் போடும் பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி புன்னை மரத்தை அதிகாரிகள் வெட்டியுள்ளனர். எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயிற்சி மருத்துவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"6 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மரம் 15 அடி உயரத்திற்கு வளர்ந்தது. அதனை கோவை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டிய சம்பவம் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது," என்றார் டாக்டர் ஆர். டோல்ஸ்டோய்.
உலகம் வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பீளமேடு அருகே உள்ள கேப் நீம் லேண்ட் என்ற பகுதியில் கோவை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கான போர் போடும் பணி நடைபெற்றது. அப்போது, கோவையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான டாக்டர் ஆர். டோல்ஸ்டோய் என்பவர் சாலையின் ஓரத்தில் 6 ஆண்டுகளாகிய புன்னை மரத்தை நடவு செய்து பராமரித்து வந்தார். இந்த போர் போடும் பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி புன்னை மரத்தை அதிகாரிகள் வெட்டியுள்ளனர். எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயிற்சி மருத்துவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"6 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மரம் 15 அடி உயரத்திற்கு வளர்ந்தது. அதனை கோவை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டிய சம்பவம் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது," என்றார் டாக்டர் ஆர். டோல்ஸ்டோய்.
உலகம் வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.