கோவையில் பராமரிப்பில்லாத வாய்க்கால்களால் வீணாகும் குளங்களில் தேக்கமடைந்த மழை வெள்ளம்

கோவை : மழைநீரை சேமிக்க வேண்டிய கட்டாயமான சூழலிலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிப்பின்றி கிடக்கும் வாய்க்கால்களினால், முக்கிய குளங்களின் தண்ணீர் வீணடைந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மழைநீரை சேமிக்க வேண்டிய கட்டாயமான சூழலிலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிப்பின்றி கிடக்கும் வாய்க்கால்களினால், முக்கிய குளங்களின் தண்ணீர் வீணடைந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



நிலத்தடி நீர்மட்டம் சரிவு மற்றும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீண்டு வர மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் எந்தவிதமான குளங்களும், குட்டைகளும் நிரம்பாதது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளுக்கு பல்வேறு வாய்க்கால்களின் மூலமாக தண்ணீரினை கொண்டு சேர்ப்பது நொய்யல் ஆறு. அப்படிபட்ட நொய்யல் ஆற்றின் வாய்க்கால்களை பராமரிப்பதில் கோவை மாவட்ட நிர்வாகம் தவறி விட்டது. இதனால், கோவை மக்கள் மீண்டும் தண்ணீர் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கே. மோகன்ராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் பராமரிப்பு இல்லாத வாய்க்கால்களினால், மழைக் காலங்களில் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் நொய்யல் ஆற்று நீர் வீணடைகிறது. 



பெரும்பாலான நொய்யல் ஆற்றின் வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்புகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. குளங்கள் மற்றும் ஏ.பி.டி. வாய்க்கால்கள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அப்படியிருக்க இந்த குளங்கள் மட்டும் கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இதனை கவனிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்," என்றார்.



"பொதுவாக குறிச்சி, வெள்ளலூர் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் தேங்கும் தண்ணீர் 30 நாட்களாவது இருக்கும். ஆனால், தற்போது 5 நாட்களிலேயே குறைந்து விடுகிறது. காரணம், குனியமுத்தூர் கால்வாய் சேதமடைந்த நிலையில், பல்வேறு கால்வாய்கள் பராமரிப்பின்றி கிடப்பதே ஆகும். அதேவேளையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை பராமரிக்கவும், அழகுபடுத்தவும் பெரும் தொகையை ஒதுக்கீடு செய்யும் மாநகராட்சி நிர்வாகம், கால்வாய்களை தூய்மைபடுத்த சொற்ப நிதியே ஒதுக்கீடு செய்துள்ளது," என்கிறார் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஆர். மணிகண்டன்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்வாய்க்கள் அனைத்தும் மிகவும் குறுகலானது. 1,000 கனஅடி தண்ணீர் செல்லக் கூடிய நொய்யல் கால்வாய்களில் தற்போது 4,000 கனஅடி நீர் பாய்கிறது," எனக் கூறினார். இதனிடையே, இது தொடர்பாக கருத்து கேட்க பொதுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...