கோவை : காஞ்சிபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய மாவட்ட ஆட்சியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் காவல்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை : காஞ்சிபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய மாவட்ட ஆட்சியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் காவல்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் காவல்துறை சங்கம் மற்றும் முன்னாள் காவல்துறை அறக்கட்டளை சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அச்சங்கத்தின் தலைவரான ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி கூறியதாவது :- காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியிலிருந்த ரமேஷ் என்கிற காவல் ஆய்வாளரை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தரக்குறைவாக மனிதாபிமற்ற முறையில் பேசியுள்ளார். இந்த செயல் காவலருக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமின்றி, பொதுமக்களிடையே காவல்துறை மீது கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வருந்துகிறோம். காவல் ஆய்வாளர் ரமேஷ் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும்.சாதாரண மனிதரைக் கூட பேச முடியாத வார்த்தைகளை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் இதுபோன்று பேசுவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஆய்வாளர் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் காவல்துறையை சார்ந்தவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தங்களது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்ட ரீதியாக பொது நல வழக்கு தொடர உள்ளோம். மேலும், முதலமைச்சர், டி.ஜி.பி. மற்றும் முதன்மை செயலாளர், உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனுவாக அளிக்க உள்ளோம். வி.ஐ.பி. பாஸ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டாலும், ஒருவரை அனுமதிக்கும் உரிமை சட்டப்பூர்வமாகவே அங்கு பணியில் உள்ள ஆய்வாளருக்கு தான் உண்டு. இவ்வாறு சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கும் காவல்துறை அதிகாரிகளை இப்படி தரக்குறைவாக நடத்தியது கண்டனத்திற்குரியது. இவ்வாறான செயல்களால் பாதிக்கப்படுபவர்கள், காவல்துறையில் பணிபுரிபவர்கள் பாவம் பட்ட ஜென்மங்கள், என்றார்.