கேரளாவில் 8 மணி நேரம் மழையில் நனைந்து கிடந்த 40 நாட்களே ஆன கைக்குழந்தை பத்திரமாக மீட்பு : கோவையின் டெல்டா குழுவினருக்கு பாராட்டு

கோழிக்கோடு : வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் கோழிக்கோடு பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையையும், அதன் பெற்றோரையும் மீட்ட கோவையின் டெல்டா குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


கோழிக்கோடு : வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் கோழிக்கோடு பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையையும், அதன் பெற்றோரையும் மீட்ட கோவையின் டெல்டா குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு வடக்குகேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த புதுமலை, கவளப்பாறை ஆகிய 2 கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி புதைந்து போனது. இதுவரை அங்கு 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கேரளாவில் கோவையைச் சேர்ந்த டெல்டா குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், கோழிக்கோட்டின் சேருப்பா பகுதியில் கடந்த 10-ம் தேதி இறுதிகட்ட மீட்பு பணிகள் நடைபெற்றது. அப்போது, பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை உடல் முழுவதும் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக நீரில் நனைந்தவாறு வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்தது. இதையறிந்த டெல்டா குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு குழந்தையையும், பெற்றோரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர்களுக்கு ரெயின் கோர்ட் அளித்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள முகாமிற்கு படகில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே, பச்சிளம் குழந்தையையும், அதன் பெற்றோரையும் காப்பாற்றிய டெல்டா குழுவினருக்கு அங்குள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...