கோவை : கோவையில் தொடர் கனமழை பெய்தும் சிறுவாணி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டாமல் இருப்பது உள்ளூர் மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
கோவை : கோவையில் தொடர் கனமழை பெய்தும் சிறுவாணி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டாமல் இருப்பது உள்ளூர் மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. அதேபோல, கோவையின் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோவை முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை நிரம்பாதது கோவை மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அணையின் நீர்மட்டம் குறித்து எந்தவிதமான விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், மொத்தம் 49.43 அடியைக் கொண்ட சிறுவாணி அணை, தற்போது முழு கொள்ளளவை விட 2 அடி குறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. அதேபோல, கோவையின் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோவை முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை நிரம்பாதது கோவை மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அணையின் நீர்மட்டம் குறித்து எந்தவிதமான விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், மொத்தம் 49.43 அடியைக் கொண்ட சிறுவாணி அணை, தற்போது முழு கொள்ளளவை விட 2 அடி குறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.