கோவை : கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வரும் நிலையில், மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி இயற்கை அன்னைக்கு தன்னார்வலர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.
கோவை : கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பி வழிந்து வரும் நிலையில், மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி இயற்கை அன்னைக்கு தன்னார்வலர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நொய்யல் ஆற்றின் நீர் வழித்தடங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெள்ளலூர் குளமும் நிரம்பியது. இந்த நிலையில், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் வெள்ளலூர் குளக்கரையில் 131-வது வார தொடர் களப்பணி நேற்று நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, வெள்ளலூர் குளக்கரையில் இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி நன்றி கூறப்பட்டது.

மேலும், மியாவாக்கி அடர் வனத்தில் பராமரிப்பு பணியும் மரக்கன்றுகள் நடும் களப்பணியும் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நொய்யல் ஆற்றின் நீர் வழித்தடங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெள்ளலூர் குளமும் நிரம்பியது. இந்த நிலையில், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் வெள்ளலூர் குளக்கரையில் 131-வது வார தொடர் களப்பணி நேற்று நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, வெள்ளலூர் குளக்கரையில் இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் வகையில் மலர்கள் மற்றும் நவதானியங்கள் தூவி நன்றி கூறப்பட்டது.

மேலும், மியாவாக்கி அடர் வனத்தில் பராமரிப்பு பணியும் மரக்கன்றுகள் நடும் களப்பணியும் நடைபெற்றது.