கோவை : தலைக்கவசம் உயிர் கவசம் என்பதனை வலியுறுத்தி இந்திய தலைவர்கள் உருவம் கொண்ட தலை கவசத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தங்க நகை பட்டறை தொழிலாளி மேற்கொண்டு வருகிறார்.
கோவை : தலைக்கவசம் உயிர் கவசம் என்பதனை வலியுறுத்தி இந்திய தலைவர்கள் உருவம் கொண்ட தலை கவசத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தங்க நகை பட்டறை தொழிலாளி மேற்கொண்டு வருகிறார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது சிறிய அளவு தங்கத்தால் பல்வேறு வடிவங்கள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

தற்போது, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, எனாமல் பெயிண்ட் கொண்டு தேச தலைவர்களின் உருவப்படங்களை தலைகவசத்தில் வரைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டின் நாளைய தலைவர்கள் இளைஞர்கள் என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள சுபாஷ் சந்திரபோஸ், காந்தி, நேரு, பகத்சிங், டாக்டர். ராதாகிருஷ்ணன், விவேகானந்தர், கோகலே, ராஜாராம், அம்பேத்கர் உள்ளிட்ட 12 தலைவர்களின் உருவங்களுடன் இந்திய வரைபடத்துடன் வரைந்து உள்ளேன். இதனை வரைய இரண்டு நாட்கள் ஆனது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப அரசு என்னதான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இளைஞர்கள் பொதுமக்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி இதனை செய்துள்ளேன், என தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது சிறிய அளவு தங்கத்தால் பல்வேறு வடிவங்கள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

தற்போது, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, எனாமல் பெயிண்ட் கொண்டு தேச தலைவர்களின் உருவப்படங்களை தலைகவசத்தில் வரைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டின் நாளைய தலைவர்கள் இளைஞர்கள் என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள சுபாஷ் சந்திரபோஸ், காந்தி, நேரு, பகத்சிங், டாக்டர். ராதாகிருஷ்ணன், விவேகானந்தர், கோகலே, ராஜாராம், அம்பேத்கர் உள்ளிட்ட 12 தலைவர்களின் உருவங்களுடன் இந்திய வரைபடத்துடன் வரைந்து உள்ளேன். இதனை வரைய இரண்டு நாட்கள் ஆனது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப அரசு என்னதான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இளைஞர்கள் பொதுமக்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி இதனை செய்துள்ளேன், என தெரிவித்தார்.