நீலகிரி மலை ரயில் தனியார் மயமாக்கப்படமாட்டாது : மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திட்டவட்டம்

நீலகிரி : நீலகிரி மலை ரயில் தனியார் மயமாக்கப்படமாட்டாது என மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மலை ரயில் தனியார் மயமாக்கப்படமாட்டாது என மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வருகை தந்த மத்திய ரயில்வேத் துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் இது தொடர்பாக பேசியதாவது :- ரயில்வேயில் திறமையான ஆட்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களைக் கொண்டு மலை ரயில் சேவை நன்றாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தனியார்மயம் ஆக்கப்பட வாய்ப்பு இல்லை. மேலும், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளதுமான இந்த மலை ரயில் ஆசியாவிலேயே குன்னூரில் தான் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. நம் நாட்டில் மலை ரயில் சேவை இயக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம், எனக் கூறினார். 



இதைத் தொடர்ந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான புனரமைக்கப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திறந்து வைத்தார். 



பின்னர், குன்னூர் ரயில்நிலையத்தில் தென்னக ரயில்வே நிர்வாகமும், மத்திய தபால் துறையும் இணைந்து அறிமுகம் செய்த நீலகிரி மலை ரயில் குறித்த தபால் தலையை மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் மற்றும் மேற்கு தபால் துறை இயக்குநர் சீலிபர்மன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், முதன்மை கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், குன்னூர் ரயில்வே நிலைய மேலாளர் பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...