கோவை : தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோவை குற்றாலத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கோவை : தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோவை குற்றாலத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் கடந்த 6-ம் தேதி முதல் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழைய வாகன நிறுத்தம் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு இடையிலான மூன்று இடங்களில் இன்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலச்சரிவின் மூலம் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் கடந்த 6-ம் தேதி முதல் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழைய வாகன நிறுத்தம் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு இடையிலான மூன்று இடங்களில் இன்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலச்சரிவின் மூலம் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.