கனமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை மாநகராட்சியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் பருவமழையின் காரணமாக மழைநீர் வாய்க்கால்களில் நிரம்பி செல்வதால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் உடனிருந்தார்.

கோவை மாநகராட்சி புட்டுவிக்கி பிரதான சாலையில் பருவமழையின் காரணமாக ராஜவாய்க்கால் பகுதியிலும், நொய்யல் பாலம் பகுதியிலும், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் மழைநீர் நிரம்பி செல்வதையும், தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும், வாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்கவும், வாய்க்கால்களின் கரையோரம் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் தி.ரா.ரவி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...