கோவை : மழை காரணமாக கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் இருந்த 40 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்ததில் கார் மற்றும் சரக்கு ஆட்டோ சேதமடைந்துள்ளது.
கோவை : மழை காரணமாக கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் இருந்த 40 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்ததில் கார் மற்றும் சரக்கு ஆட்டோ சேதமடைந்துள்ளது.
பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கோவையில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த நிலையில், இன்று ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள பூங்காவில் இருந்த வாகை மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அவ்வழியாக வந்த கார் மற்றும் சரக்கு ஆட்டோ மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் மற்றும் ஆட்டோவில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 40 ஆண்டு கால பழமையான மரம் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கோவையில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த நிலையில், இன்று ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள பூங்காவில் இருந்த வாகை மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அவ்வழியாக வந்த கார் மற்றும் சரக்கு ஆட்டோ மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் மற்றும் ஆட்டோவில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 40 ஆண்டு கால பழமையான மரம் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.