திருப்பூர் : தனியார் கேபிள் நிறுவனம் நடத்துவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும், அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : தனியார் கேபிள் நிறுவனம் நடத்துவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும், அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்தும், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றியும் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். திருப்பூர் மங்கலம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் கரையோரம் உள்ள பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், உடுமலை சின்னாறு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மலைவாழ் குடியிருப்பு மக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதனிடையே, அக்க்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- தமிழக அரசு குறைந்த விலையில் கேபிள் இணைப்புகளை வழங்க இருக்கும் சூழ்நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தற்போது தனியார் கேபிள் உரிமத்திற்கு இணையம் மூலமாகவே உரிமம் பெறப்பட்டு வருவதால், அக்க்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். மேலும், அ.தி.மு.க. ஆட்சி இல்லாத காலத்தில் தமிழகத்தில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது, எந்த அளவு இருந்தது என்பதையும் ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும், எனக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்து விட்டார்.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்தும், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றியும் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். திருப்பூர் மங்கலம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் கரையோரம் உள்ள பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், உடுமலை சின்னாறு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மலைவாழ் குடியிருப்பு மக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதனிடையே, அக்க்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- தமிழக அரசு குறைந்த விலையில் கேபிள் இணைப்புகளை வழங்க இருக்கும் சூழ்நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தற்போது தனியார் கேபிள் உரிமத்திற்கு இணையம் மூலமாகவே உரிமம் பெறப்பட்டு வருவதால், அக்க்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். மேலும், அ.தி.மு.க. ஆட்சி இல்லாத காலத்தில் தமிழகத்தில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது, எந்த அளவு இருந்தது என்பதையும் ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும், எனக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்து விட்டார்.