சீறிப்பாயும் சிறுவாணி அணை : சமூக வலைதளங்களில் உலா வரும் போலியான வீடியோ

கோவை : சிறுவாணி அணை இன்னும் அதன் கொள்ளளவை எட்டாத நிலையில், அணை நிறைந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது போன்ற போலியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

கோவை : சிறுவாணி அணை இன்னும் அதன் கொள்ளளவை எட்டாத நிலையில், அணை நிறைந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது போன்ற போலியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. 

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பி வருகிறது. 



இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த சிலர், சிறுவாணி அணையின் நீர் பாய்ந்தோடும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதாக வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

நீலகிரி, சீன மற்றும் வேறு இரு பகுதிகளில் உள்ள அணைகளின் காட்சிகளை, சிறுவாணி அணை மற்றும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி எனப் பெயர் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இதுபோன்ற போலியான வீடியோக்களை வீணாகப் பரவச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...