திருப்பூரில் தொடர்ந்து 2-வது நாளாக கரைபுரண்டோடும் நொய்யல் ஆறு : பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு

திருப்பூர் : திருப்பூரில் பாய்ந்து வரும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக 2-வது நாளாக பல பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் : திருப்பூரில் பாய்ந்து வரும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக 2-வது நாளாக பல பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் கோவையிலிருந்து நொய்யலுக்கு வெள்ள நீர் அதிக அளவில் வந்ததன் காரணமாக, மங்கலம் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 



அதேபோல், திருப்பூர் ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் அதிக நீர் செல்வதன் காரணமாக, பாலம் பலவீனமாக இருப்பதால் அவ்வழியே வாகனம் செல்வதை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெவ்வேறு பாதைகளில் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 



கருவம்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள குடிசைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மழைக்காலங்களில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...