நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களாக 233 பகுதிகள் அறிவிப்பு : மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழைக்கு 233 பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழைக்கு 233 பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 



முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. குந்தா, கூடலூர், அவலாஞ்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும், அணையில் இருந்து பல ஆயிரக்கணக்கிலான கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகள் என அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மிக அதிகமாக 23 இடங்களிலும், அதிகமாக 80 இடங்களிலும், மிதமாக 130 இடங்களும் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்பு, ஆயுதப்படை, தீயணைப்பு படை என மொத்தம் 491 பேர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குந்தா, கூடலூர், உதகை, பந்தலூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மாவட்டம் முழுவதும் மொத்தம் 155 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 26 நிவாரண முகாம்களில் 157 குடும்பங்களைச் சேர்ந்த 1,706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மழை பாதிப்பினால் 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிவாரண முகாம்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...