கோவையில் 'டெக்ஸ்பேர் 2019' எனும் ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி தொடக்கம்

கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமாவின் 12-வது 'டெக்ஸ்பேர் 2019' கண்காட்சி கோவை கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது.

கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமாவின் 12-வது 'டெக்ஸ்பேர் 2019' கண்காட்சி கோவை கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது. 



முன்னதாக இதன் துவக்க விழாவில், மும்பை டெக்ஸோபிரில் தலைவர் டாக்டர் சீனிவாசன் கண்காட்சி மலரை வெளியிட, ஜவுளி பொருட்கள் மற்றும் அதன் சங்கத்தின் தலைவர் அஜய் ஷா அதனைப் பெற்றுக் கொண்டார். இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில், ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகம் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களின் சுமார் 320 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பியா, ஜப்பான், சீன நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். 



செலவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களுடன், புதுமையான இயந்திரங்கள், ரோபோட்டிக் வகை என பல்வேறு வகை இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் இணைந்து 'சைமா பார்ம் டு பினிஷ்' எனும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் இங்கு நடைபெற்று வருகிறது. ஜவுளி நிறுவனங்கள் பஞ்சு, பருத்தி விதை, நுால், துணி, ஆயத்த ஆடை மற்றும் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இக்கண்காட்சி இருக்கும் என கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...