திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஐஸ்கடை மூன்றாவது விதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சிங்கர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, இன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில், பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவிநாசி போலீசாருக்கு புகார் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஐஸ்கடை மூன்றாவது விதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சிங்கர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, இன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில், பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவிநாசி போலீசாருக்கு புகார் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.