மத்திய அரசைக் கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 150 பேர் கைது

கோவை : மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாக்களைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாக்களைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர். 



என்.ஐ.ஏ., யு.ஏ.பி.ஏ. சட்டங்களில் மாநில சுயாட்சியைப் பறிக்கும் விதமாக சட்ட திருத்தங்கள் மேற்கொண்டதற்கும், காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட 370-30ஏ சிறப்பு சட்டங்களை நீக்கி ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர், தடுப்புகளை தாண்டி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றனர். இதனால், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல, ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்ற ம.ஜ.க. கட்சியினரை காவல்துறையினர் செய்தனர். 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. பெரும்பான்மை வெற்றி பெற்ற மமதையில் இதுவரை இல்லாத அளவு 30 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, அதிகார தோரணையுடன் நடக்கிறது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பிற மாநிலங்களில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் அவமதிப்புக்கான முன்னோட்டம்," என தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...