கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் வெள்ளநீர், குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் வெள்ளநீர், குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சிறுமுகையில் பவானி ஆற்றினை ஒட்டியுள்ள வச்சினம்பாளையம் அருகே உள்ள குள்ளங்கரை தோட்டம் பகுதியில் மகாலிங்கம், வெள்ளியங்கிரி, ஆறுக்குட்டி, ஆரான் ஆகியோர் தனித்தனியே குடும்பத்துடன் நான்கு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் சுமார் 88,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றின் கரையை தாண்டி அங்குள்ள சிறு ஓடை வழியே வெளியேறிய தண்ணீர், இந்த நான்கு வீடுகளுக்குள் நுழைந்தது. உடனடியாக, சுதாரித்து கொண்ட மகாலிங்கம், வெள்ளியங்கிரி மற்றும் இருவர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேற்றினர்.

இருப்பினும், தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்ததால் முதலில் அதன் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து சேதமாகின. பின்னர், அடுத்தடுத்து சுவர்கள் இடிந்து வீடுகள் முழுவதும் நாசமானது. வீடு இடியும் நேரத்தில் சுதாரித்து அனைவரையும் வெளியேற்றியதால் பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த வீடுகளை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிகபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சில இடங்களில் மின்கோபுரங்களும் சேதமானதால், அதனை சீர் செய்யும் பணி நடைபெறுவதால் மின்சாரமும் துண்டிக்கபட்டுள்ளது.

சிறுமுகையில் பவானி ஆற்றினை ஒட்டியுள்ள வச்சினம்பாளையம் அருகே உள்ள குள்ளங்கரை தோட்டம் பகுதியில் மகாலிங்கம், வெள்ளியங்கிரி, ஆறுக்குட்டி, ஆரான் ஆகியோர் தனித்தனியே குடும்பத்துடன் நான்கு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் சுமார் 88,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றின் கரையை தாண்டி அங்குள்ள சிறு ஓடை வழியே வெளியேறிய தண்ணீர், இந்த நான்கு வீடுகளுக்குள் நுழைந்தது. உடனடியாக, சுதாரித்து கொண்ட மகாலிங்கம், வெள்ளியங்கிரி மற்றும் இருவர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேற்றினர்.

இருப்பினும், தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்ததால் முதலில் அதன் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து சேதமாகின. பின்னர், அடுத்தடுத்து சுவர்கள் இடிந்து வீடுகள் முழுவதும் நாசமானது. வீடு இடியும் நேரத்தில் சுதாரித்து அனைவரையும் வெளியேற்றியதால் பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த வீடுகளை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிகபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சில இடங்களில் மின்கோபுரங்களும் சேதமானதால், அதனை சீர் செய்யும் பணி நடைபெறுவதால் மின்சாரமும் துண்டிக்கபட்டுள்ளது.