தொடர் மழையினால் போக்குவரத்து பாதிப்பு : உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து மாற்றம்

கோவை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உக்கடம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

கோவை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உக்கடம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, மாற்றுப் பாதைகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் என தனித்தனியே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜுன் மாதம் 3-ம் தேதி முதல் உக்கடம் - புட்டு விக்கி சாலை வழியாக பேருந்து, கார்கள் மற்றும் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கோவையில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால், உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், புதிய மீன் மார்க்கெட், கரும்புக்கடை, வழியாக ஆத்துப்பாலம் சந்திப்புக்கு செல்லுமாறு இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. நேற்று மாலை முதல் இந்த சாலைகளும் மூடப்பட்ட நிலையில், மீண்டும் குளத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக உக்கடம் - ஆத்துப்பாலம் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...