நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழைக்கு தாய், மகள் உள்பட 5 பேர் இதுவரை பலி

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் தாய், மகள் உள்பட 5 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் தாய், மகள் உள்பட 5 பேர் இதுவரை உயிரிழந்தனர். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை 8-வது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. காற்றுடன் கூடிய தொடர்மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.



இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடு இடிந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இன்று நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் அமுதா (36) மற்றும் அவரது மகள் காவியா (12) ஆகிய இருவரும் வீடு இடிந்து விழுந்து பலியாகினர். அதைத் தொடர்ந்து, காட்டுக் குப்பை பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். குருத்துக் குளி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் விமலா (38), சுசீலா (36) இருவரும் பலியாகினர்.



தொடர்ந்து, மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த இரண்டு நாட்களில் 5 உயிர்கள் பலியாகி உள்ளன. எனவே, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...