கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீரில் சிக்கி தவித்த பொதுமக்கள் : தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் அனைவரும் பத்திரமாக மீட்பு

கோவை : கோவை நாகராஜபுரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததையடுத்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.


கோவை : கோவை நாகராஜபுரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததையடுத்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.



தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில், கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால், மழைநீர் ஆங்காங்கே பாய்ந்து வருகிறது. அதேபோல, குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது. இதன் ஒரு தொடர்ச்சியாக கோவை பேரூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியில் இருக்கும் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வர முடியாதபடிக்கு பொதுமக்கள் மாட்டி தவித்தனர். இது தொடர்பாக  தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்பு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் மாவட்ட அலுவலருக்கு உடனடி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தெற்குப் பகுதி தீயணைப்பு துறையினரும், வடக்குப்பகுதி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முத்து குமார், செல்வ மோகன் லீடர்ஸ் கருப்புசாமி, சசிகுமார் என மொத்தம் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் குடியிருப்பு பகுதியில் மாட்டிக் கொண்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மழைநீரில் மாட்டிக்கொண்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களை தீயணைப்பு துறையினர் தூக்கி வந்து பாதுகாப்பான இடங்களில் விட்டனர். இப்படி சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போராடி 50-க்கும் மேற்பட்டோரை பத்திரப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

அதேபோல, கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, தொடர்ந்து மீட்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...