நீலகிரியில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிறுமி உள்பட இருவர் பலி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுமி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுமி உள்பட இருவர் உயிரிழந்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை 8-வது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. காற்றுடன் கூடிய தொடர்மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.



இந்த நிலையில், நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. இதில், வீட்டினுள் இருந்த அமுதா (36), காவியா (12) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், லோகேஷ் (12) என்ற படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சம்பவ இடத்தில் மீட்புப் பணி குழுவினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...